Crime

சென்னை: சவுகார்பேட்டையில் ஆவணம் ஏதுமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.7 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

யானைகவுனி போலீஸார் நேற்று முன்தினம் மதியம் சவுகார்பேட்டை, ஆதியப்பா தெருவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றிருந்த இருவர் வைத்திருந்த பைகளை சோதனையிட்டதில், அதில் ரூ.7 கோடியே 38 லட்சம் மதிப்புடைய தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/r6N8tE1

Post a Comment

0 Comments