
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே கட்டிடத் தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் கொலைசெய்யப்படுக் கிடந்தார்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம்பட்டியைச் சேர்ந்தவர் முத்துமணி (46). கட்டிடத் தொழிலாளி. நேற்று இரவு வீட்டைவிட்டு வெளியே சென்ற முத்துமணி நள்ளிரவாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், இன்று காலை பல இடங்களில் முத்துமணியை குடும்பத்தினர் தேடி வந்தனர். இந்நிலையில், பாளையம்பட்டி அருகே புறவழிச்சாலை இணைப்பு பகுதியில் செல்வம் என்பவருக்குச் சொந்தமான தோட்டக் கிணறு அருகே முத்துமணி அடித்துக் கொலைசெய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2mlZhfX
0 Comments