
புதுச்சேரி: லண்டன் மாநாட்டுக்கு தேர்வானதாக போலி இமெயில் அனுப்பி என்ஐடி பேராசிரியரிடம் ரூ. 5 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக குஜராத் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி பிராந்தியம் காரைக்கால் திருவட்டக்குடி என்ஐடி வளாகம் பேராசிரியர் குடியிருப்பைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (45), என்ஐடி இணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் இவருக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் மாநாட்டு ஏற்பாட்டு குழு அமைப்பாளர் என ஒருவர் அனுப்பியுள்ளார். பின்னர் லண்டனில் நடைபெற உள்ள நிலையான வளர்ச்சி இலக்குகள் சம்பந்தமான மாநாட்டில் பங்கு கொள்ள பேராசிரியர் செந்தில் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவித்துள்ளார். மேலும் அதற்கான ஆணையை மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lP6w1Mk
0 Comments