
மதுரை: மதுரையில் கண்ணாடிக் கடை ஊழியர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மதுரை செல்லூர் அருள்தாஸ்புரத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் சரவணக்குமார் (33). ஓட்டுநரான இவர், கோவையில் கண்ணாடி கடையில் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் அவர் மதுரைக்கு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று பிற்பகலில் தத்தனேரி மயானப் பகுதியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வைகை வடகரை சாலைக்குச் சென்றார். அப்போது, பின்னால் வேகமாக காரில் வந்த 5 பேர் கும்பல் இருசக்கர வாகனத்தை இடித்து அவரை கீழே தள்ளி விட்டு அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/koD4Xx9
0 Comments