
புதுடெல்லி: தெற்கு டெல்லியில் பாதுகாப்பு சேவை மையத்தின் இயக்குநர் ஒருவரின் செல்போனுக்கு அண்மையில் தொடர்ந்து அழைப்புகள் வந்துள்ளன. அவர் அழைப்பை எடுத்ததும், மறுமுனையில் எந்த பதிலும் வரவில்லை. தொடர்ந்து அழைப்புகள் வந்துள்ளன.
அதன்பின், அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.12 லட்சம், ரூ.4.6லட்சம், 2 முறை ரூ.10 லட்சம், ரூ.13.4லட்சம் என 4 பேரின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது. பணப் பரிமாற்றத்துக்கான ஓடிபி எண்ணும் அவருக்கு வரவில்லை. உடனடியாக அவர் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்க, வங்கிக் கணக்குக்கு பணம் சென்றவர்களை அழைத்து விசாரித்தனர். அப்போது மோசடியாளர்கள், கமிஷன் அளிப்பதாகக் கூறி தங்களது வங்கிக் கணக்கைக் கேட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qhl1v0P
0 Comments