
நாகர்கோவில்: இரணியல் சார் பதிவாளர் அலுவலகத்தில் விடிய விடிய லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் ரூ.4.5 லட்சம் பணம் சிக்கியது. தரகர்கள் லஞ்ச பணத்தை வீசி எறிந்ததால், அலுவலகத்தை சுற்றி ரூபாய் நோட்டுகள் சிதறிக் கிடந்தன. சார்பதிவாளர் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவுக்கு புரோக்கர்கள் மூலம் அதிக அளவில் லஞ்சப் பணம் பெறுவதாகவும், முறைப்படி பதிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் அலைகழிக்கப்படுவதாகவும் தொடர் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரகசியமாக தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mGHUZQ6
0 Comments