
தென்காசி: தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே பால் வியாபாரிகள் 2 பேர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகளை கைது செய்யக் கோரி உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம், ஊத்துமலை அருகே உள்ள நொச்சிகுளம் கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவரது மகன் ஆனந்த் (26). இதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் சூரியராஜ் (17). உறவினர்களான இவர்கள் இருவரும் பால் வியாபாரிகள். இவர்கள் இருவரும் வழக்கமாக தினமும் இரவில் இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள பலபத்திர ராமபுரம், கங்கனா கிணறு உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்று பால் எடுத்துவிட்டு ஊருக்கு திரும்புவது வழக்கம். நேற்று இரவு பால் எடுக்கச் சென்ற இருவரும் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் இவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் இருவரையும் தேடிச் சென்றனர். மேலும், ஊத்துமலை காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/h3ciIsK
0 Comments