
மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், உப்பூர் சத்திரத்தைச் சேர்ந்தவர் தினேஷ் (30). இயந்திர பொறியியல் (mechanical engineering) படித்துள்ள இவர், கடந்த 3 ஆண்டுக்கு முன்பு மதுரை பாண்டிக் கோயில் அருகிலுள்ள பிரபல தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். இதற்காக அவர் மதுரை உத்தங்குடி பகுதியில் வீடு எடுத்து தனது தாயாருடன் தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 9ம் தேதி பணியில் இருந்த போது, 4வது மாடியில் இருந்து அவர் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக அவரது சகோதரர் விக்கேஷ் கொடுத்த புகாரின் பேரில் மாட்டுத்தாவணி காவல் ஆய்வாளர் ராஜாங்கம் விசாரணை நடத்தி வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vsyrXK4
0 Comments