
குணா: ஆழ்துளை கிணறு போல வடிவமைத்து சாராயத்தை பதுக்கி விற்பனை செய்து வந்த சம்பவம் மத்தியபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் குணாமாவட்டம் சன்சோடா, ரகோகர் ஆகிய 2 கிராமங்களில் அண்மையில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு ஆழ்துளைக் குழாயில் போலீஸார் சாராயம் வருவதைக் கண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் அங்கு பள்ளம் தோண்டினர். அப்போது அங்கு 7 அடி ஆழத்தில் ஏராளமான சாராய ஊறல் கேன்கள் இருந்துள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8O5MHbX
0 Comments