Crime

ராமநாதபுரம்: பரமக்குடி எம்எல்ஏ தரப்பினருக்கும், திமுக நகராட்சி உறுப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் நகராட்சி உறுப்பினருக்கு இடுப்பில் கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 5-க்கும் மேற்பட்டோர்மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி 5-வது வார்டு உறுப்பினர் பாக்கியராஜ் மற்றும் திமுக பரமக்குடி வடக்கு நகர் செயலாளரும், நகர்மன்ற உறுப்பினருமான ஜீவரெத்தினம் ஆகியோர், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திமுக ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்ட காதர்பாட்சா முத்துராமலிங்கத்தை வரவேற்று பிளக்ஸ் பேனர்கள் நகரில் வைத்துள்ளனர். அதில் பரமக்குடி எம்எல்ஏ செ.முருகேசனின் படம் இடம் பெறவில்லை. இதுகுறித்து எம்எல்ஏ தரப்பைச் சேர்ந்த விக்னேஸ்வரன் கைபேசி மூலம் நகராட்சி உறுப்பினர் பாக்கியராஜிடம் கேட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GjVH7Xd

Post a Comment

0 Comments