
காசியாபாத்: உத்தர பிரதேசம் காசியாபாத்தில் நகைக்கடை உரிமையாளரை, கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். தப்பியோட முயன்ற கொள்ளையன் ஒருவனை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். மற்றொரு கொள்ளையனை போலீஸார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
உத்தர பிரதேசம் காசியாபாத்தில் லோனி என்ற இடத்தில் டிஎல்எப் பகுதியில் சகிந்தர் யாதவ்(35) என்பவர் தங்க நகைக்கடை வைத்துள்ளார். இவரது நடவடிக்கைகளை அஜய் குமார், பன்ட்டி என்ற இருவர் நீண்ட நாட்களாக கண்காணித்துள்ளனர். கடந்த திங்கள் இரவு 8.30 மணியளவில், சகிந்தர் யாதவ் தனது கடையை மூடிவிட்டு ஒரு பையுடன் தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். அந்த பையில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3RzolcB
0 Comments