
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் 10 டன் ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்கள் சூழலுக்கும், உடல் நலத்துக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதால் அவற்றை வளர்க்கக் கூடாது என அரசு தடை விதித்துள்ளது.
ஆனாலும், இவ்வகை மீன்கள் குறைவான நாட்களில் அதீத வளர்ச்சியடைவது வணிக நோக்கில் சிறப்பாக கருதப்படுவதால், தடையையும் மீறி சிலர் ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்களை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், இவ்வகை மீன் வளர்ப்போரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர் சாந்தி உத்தரவிட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/B7CxiOP
0 Comments