Crime

திருப்பூர்: திருப்பூர் அரசு வழக்கறிஞர், அவரது மகளைக் கொல்ல முயன்ற வழக்கில், சட்டம் படித்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் ஜமீலா பானு (42). திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 18-ம் தேதி தனது மகள் அமிர்நிஷாவுடன் (20) குமரன் சாலையில் இருந்த அலுவலகத்தில் இருந்தபோது, திருப்பூர் பெரியதோட்டத்தை சேர்ந்த ரகுமான்கான் (25) என்பவர், அரிவாளால் வெட்டி அங்கிருந்து தப்பினார். தன்னை அமிர்நிஷா காதலிக்க மறுத்ததால், அவரையும், அவரது தாயையும் கொல்லும் முயற்சியில் ஈடுபட்டது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/EUN8swJ

Post a Comment

0 Comments