
காரைக்கால்: காரைக்காலில் விஷம் கலந்த குளிர்பானத்தைக் குடித்த பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவத்தில், குளிர்பானத்தில் எலி பேஸ்டை கலந்து கொடுத்ததாக, போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சக மாணவியின் தாயார் சகாயராணி விக்டோரியா வாக்கு மூலம் அளித்துள்ளார்.
காரைக்கால் நேரு நகரில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த சிறுவன் பால மணிகண்டன்(13), படிப்பில் ஏற்பட்ட போட்டிக் காரணமாக சக மாணவியின் தாயார் சகாயராணி விக்டோரியா என்பவரால் விஷம் கலந்து கொடுக்கப்பட்ட குளிர்பானத்தைக் குடித்ததால், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி கடந்த 3-ம் தேதி இரவு உயிரிழந்தார். அரசு மருத்துவமனையில் லட்சியப் போக்கே மாணவர் உயிரிழப்புக்குக் காரணம் என பெற்றோர்கள், உறவினர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Ob8zWtB
0 Comments