
திருப்பூரில் மூதாட்டியைக் கொன்று நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேரை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்து, 40 பவுன் நகை மற்றும் ரூ.9.82 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் 15 வேலம்பாளையத்தை அடுத்த சோளிபாளையம் சீனிவாசா நகரை சேர்ந்தவர் கோபால் (70). இவரது மனைவி முத்துலட்சுமி (62). இவர்களுக்கு 2 மகன்கள். இருவரும் திருமணமாகி, திருப்பூர் மற்றும் கோவையில் வசித்து வருகின்றனர். நேற்று மதியம் முத்துலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மாலை 6 மணிக்கு கோபால் வீடு திரும்பியபோது, கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YfgZkOp
0 Comments