
கோவை: மேட்டுப்பாளையத்தில் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் மீது ஆசிட் அமிலம் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். அதேபோல், பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு கால்நடைத் துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கோவை மேட்டுப்பாளையம், கல்லாறு ரயில்வே கேட் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். விவசாயி. இவர், தனது தோட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட பசு மற்றும் எருமை மாடுகளை வளர்த்து வருகிறார். தினமும் அதிகாலையில், அங்குள்ள பவானிக்கரையோர பகுதிகள் மற்றும் மலையடிவாரப் பகுதிகளுக்கு மேய்ச்சலுக்கு செல்லும் இம்மாடுகள், மாலை நேரத்தில் தோட்டத்துக்கு திரும்பி விடுவது வழக்கம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/720MLUk
0 Comments