Crime

புதுடெல்லி: 40 வயதைக் கடந்த ஆண்களை குறிவைத்து ஆன்லைனில் பாலியல் மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும் மோசடிகள் அதிகரித்து வருவது தலைநகர் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்தவர் ராகேஷ் (60) இவருடைய வாட்ஸ் அப் அழைப்பில், "நீங்கள் தனியாக இருக்கிறீர்களா..அப்படியிருந்தால் எனக்கு வீடியோ கால் செய்யுங்கள்" என ஒரு பெண்ணிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வருகிறது. அதனைத் தொடர்ந்து அவரும் அந்தக் குறுஞ்செய்தியில் உள்ள லிங்கை க்ளிக் செய்து வீடியோ காலை ஏற்றுக் கொள்கிறார். பின்னர் சில நிமிடங்களில் அந்த வீடியோ கால் துண்டிக்கப்படுகிறது. அதன் பிறகு அவர் தோன்றிய வீடியோவை வைத்து ஒருவரால் மிரட்டப்படுகிறார். ரூ 80,000 கொடுக்கவில்லை என்றால் இந்த வீடியோவை சமூக ஊடகத்திலும், உங்கள் குடும்பத்தாரிடமும் அளிப்போம் என மிரட்டல் விடுக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர் அப்பணத்தை வழங்குகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9tmidYg

Post a Comment

0 Comments