
மதுரை: பெரம்பலூரைச் சேர்ந்த ராஜன், இவரது தம்பி அரங்கநாதன் ஆகியோர் குவைத்தில் பணிபுரிந்தனர். அரங்கநாதனுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதால் ஊருக்கு வந்திருந்த ராஜன், திருச்சியில் உள்ள நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு, குவைத்தில் இருந்து வரும் தம்பியை அழைத்து வருவதாகக் கூறிவிட்டு 2008-ல் காரில் சென்றார்.
அங்கு நண்பர்கள் வினோத்குமார், சரவணன் ஆகியோரை சந்தித்தார். பின்னர் ராஜனும், சரவணனும் பல்வேறு இடங்களுக்கு சென்றனர். இந்நிலையில் பெட்டவாய்த்தலை தென்னந்தோப்பில் ராஜன் கொலை செய்யப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸார் சரவணனை கைது செய்தனர். ராஜனை கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த தங்க செயின், அவரது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவற்றுடன் புதுச்சேரி சென்ற சரவணன், அங்கு நட்சத்திர ஹோட்டலில் தங்கியது தெரியவந்தது. இந்த வழக்கில் சரவணனுக்கு திருச்சி நீதிமன்றம் 2012-ல் ஆயுள் தண்டனை வழங்கியது. இதை ரத்து செய்யக்கோரி சரவணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lviPwtJ
0 Comments