Crime

கும்பகோணம்: கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சிற்பக் கூடத்தில் 1,000ஆண்டுகள் பழமையான 8 உலோகசிலைகளை சிலைக் கடத்தல் தடுப்புபிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கும்பகோணம் அருகே சுவாமிமலையில் உள்ள ஒரு சிற்பக் கூடத்தில் பழமையான உலோக சிலைகள் இருப்பதாகச் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில், சுவாமிமலை சர்வமான்ய தெருவைச் சேர்ந்த மாசிலாமணி ஸ்தபதி(65) என்பவரது சிற்பக் கூடத்தில், சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7DLohye

Post a Comment

0 Comments