
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே திருடிய 5 சுவாமி சிலைகளை ரூ.12 கோடிக்கு விற்க முயன்ற 4 பேரை தென்மண்டல சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் பகுதியிலுள்ள பழமையான கோயிலில் சுவாமி சிலைகளை திருடிய கும்பல் ஒன்று, அந்த சிலைகளை ரூ.12 கோடிக்கு விற்க முயற்சிப்பதாக தென்மண்டல சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு இயக்குநர் ஜெயந்த்முரளி உத்தரவின் பேரில், தென்மண்டல சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஎஸ்பி மலைச்சாமி தலைமையில் ஆய்வாளர் ஷமிம் பானு, எஸ்ஐக்கள் ராஜேஷ், பாண்டிராஜன், சிறப்பு எஸ்ஐக்கள் செல்வராஜ், சந்தனகுமார் அடங்கிய தனிப்படையினர் சுவாமி சிலைகளை விற்க முயன்றவர்களை தீவிரமாக கண்காணித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/oxObgwR
0 Comments