Crime

குணா (ம.பி.): மத்திய பிரதேச மாநிலம் குணா பகுதியில் வசிப்பவர் ராம்பிரியா பாய் (38). இவரது கணவர் அர்ஜுன் சகாரியா. இவர்கள் சகாரியா பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு பமோரி பகுதியில் உள்ள தனோரியா கிராமத்தில் அரசு ஒதுக்கிய மூன்றே முக்கால் ஏக்கரில் நிலம் உள்ளது.

அந்த நிலத்தை ஆக்கிரமிக்க கிராமத்தைச் சேர்ந்த சிலர் முயற்சி செய்துள்ளனர். கடந்த சனிக்கிழமை தனோரியா கிராமத்தில் உள்ள நிலத்தை சிலர் உழுது கொண்டிருந்தனர். அங்கு சென்ற ராம்பிரியா அந்த நிலம் தன்னுடையது என்று கூறி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ராம்பிரியா மீது டீசல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியுள்ளனர். இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது வெளியாகி வைரலானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/L0fFAHK

Post a Comment

0 Comments