
திருப்பூர்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் கோபாலன் (35). தொழிலாளி. இவரது மனைவி சுசீலா (30). தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பல்லடம் அருள்புரம் செந்தூரன் காலனியில் வசித்து வந்தனர். கடந்த மே 4-ம் தேதி சின்னக்கரை லட்சுமிநகர் செல்லும் சாலையில் கோபாலனை மர்மநபர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்தனர்.
மனைவி சுசீலா அளித்த புகாரின் பேரில் பல்லடம் போலீஸார் வழக்கு பதிந்து மர்மநபர்களை தேடி வந்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில், மாரீஸ்வரன் என்பவரும் சுசீலாவும் பழகி வந்ததை கோபாலன் கண்டித்ததும், கூலிப்படையை ஏவி கோபாலனை மாரீஸ்வரன் கொலை செய்ததும், இதற்கு சுசீலா உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vnswuI9
0 Comments