
பெரம்பலூர் அருகே நேற்று லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில், பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் உயிரிழந்தனர். 11 பயணிகள் காயமடைந்தனர்.
சென்னையிலிருந்து நேற்று முன்தினம் இரவு திருச்சிக்கு அரசுப் பேருந்து புறப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் எறையூர் சர்க்கரை ஆலை அருகே சின்னாறு பகுதியில் நேற்று அதிகாலை சென்றபோது, முன்னால் இரும்புக் குழாய்கள் ஏற்றிச் சென்ற லாரி மீது அரசுப் பேருந்து மோதியது. சென்னை-திருச்சி வழித்தடத்தில், சாலையின் இடதுபுறத்தில் சென்று கொண்டிருந்த லாரியை முந்த முயன்றபோது, லாரி திடீரென சாலையின் வலதுபுறத்துக்கு மாறியதால், உடனடியாக பேருந்தை நிறுத்த முடியாமல் இந்த விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/npAdJ8k
0 Comments