
நாகர்கோவில்: நாகர்கோவிலில் இருந்து மும்பைக்குரயிலில் கடத்த முயன்ற ரூ.2 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டிகளான அம்பர்கிரீஸை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
உயர்ரக வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படும் அம்பர்கிரீஸ் ரயிலில் கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு நேற்று காலை தகவல் வந்தது.நாகர்கோவில் ரயில் நிலையத்துக்கு வனத்துறையினர் விரைந்தனர். அவர்களுடன் ரயில்வே போலீஸார் இணைந்து ரயில் பெட்டிகளில் சோதனை மேற்கொண்டனர். மும்பை ரயிலின் ஏ.சி. பெட்டியில் இருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். அவரது பையில் 2 கிலோவுக்கு மேல் அம்பர்கிரீஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.2 கோடி.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xHqTVSd
0 Comments