
பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு பொது மருத்துவமனையில் பிறந்து 4 தினங்களே ஆன பெண் குழந்தையை கடத்தியவர்கள் குறித்து, 3 டிஎஸ்பிக்கள் தலைமையில் 6 தனிப்படை போலீஸார் விசாரிக்கின்றனர்.
பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் யூனிஸ்(28). அவரது மனைவி திவ்யபாரதி (25). இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த 29-ம் தேதி பொள்ளாச்சியிலுள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட திவ்யபாரதிக்கு பெண் குழந்தை பிறந்தது. தாய், சேய் இருவரும் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LUSkIlF
0 Comments