Crime

சேலம்: சேலத்தில் பிஎச்டி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை சூரமங்கலம் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொ) பேராசிரியர் கோபி (45). இவர் கடந்த மே மாதம் முதல் பொறுப்பு பதிவாளராகப் பதவி வகித்து வருகிறார். பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள குடியிருப்பில் பதிவாளர் கோபி வசித்து வருகிறார். இவர் வேதியியல் துறை பேராசிரியராக உள்ள நிலையில், மூன்று மாணவிகளுக்கு நெறியாளராக இருந்து வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yqPFb2J

Post a Comment

0 Comments