
சிவகங்கை: மானாமதுரை அருகே கடந்த மாதம் சுகாதாரத் துறை வாகனத்தில் பட்டுக்கோட்டைக்கு கடத்தி செல்லப்பட்ட ரூ.1.5 லட்சம் மதிப்பிலான 1,200 போலி மதுபாட்டில்களை போலீஸார் கைப்பற்றி 2 பேரை கைது செய்தனர்.
விசாரணையில், சிவகங்கை அருகே சிவலிங்கபுரம் பகுதியில் போலி மதுபான ஆலை செயல்படுவது தெரியவந்தது. இதையடுத்து மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸார் நேற்று சிவலிங்கபுரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்(42) என்பவரது தோட்டத்தில் சோதனை நடத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vWMLCSu
0 Comments