
கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். காவல்துறை அதிகாரி களிடம் அவர்கள் அளித்த புகாரில், ‘‘கோவை மருதமலை சாலையில், வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம் இயங்கி வந்தது.
இந்நிறுவனத்தின் சார்பில், சிங்கப்பூரில் மாதம் ரூ.3 லட்சம் ஊதியத்தில் வேலைஇருப்பதாகவும், சிவில் இன்ஜினியர், சூப்பர் வைசர், பிட்டர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. விசா பெறுதல், பயணக் கட்டணம் உள்ளிட்டவற்றுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவித்த னர். இதை நம்பி, 150-க்கும் மேற்பட் டோர் வேலைக்கு தகுந்தவாறு ரூ.ஒரு லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை ஆன்லைன் மூலமாகவும், நேரிலும் பணம் செலுத்தினர். பின்னர், அந்நிறுவனத்தின் சார்பில், எங்களது செல்போன் எண்ணுக்கு சிங்கப்பூர் நிறுவனத்தில் வேலை தயாராகி விட்டது என குறுந்தகவல் அனுப்பினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/J5F9uoM
0 Comments