
ஆத்தூரில் பழ வியாபாரியை கடத்த முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆத்தூரில் உள்ள வடக்கு தில்லை நகரைச் சேர்ந்த பழ வியாபாரி அன்பரசன், சேலம் டவுனில் பழக்கடை நடத்தி வருகிறார். இவரது நண்பர் ராம்மோகன். இவர் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கணினி பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இருவரும் பழ வியாபாரம் கூட்டாக செய்து வந்த நிலையில் ராம்மோகனுக்கு, அன்பரசன் ரூ.45 லட்சம் கொடுக்க வேண்டியிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/DN25haC
0 Comments