Crime

நாட்றாம்பள்ளி: திருப்பத்தூர் மாவட்டம் நாட் றாம்பள்ளி வட்டம், வெலக்கல்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரா. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்றபோது அவ் வழியாக தலைக்கவசம் அணிந்தபடி ஒரே இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் பவித்ரா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடினர்.

இது குறித்து நாட்றாம்பள்ளி காவல் நிலையத்தில் பவித்ரா கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வரும் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LmGxX6I

Post a Comment

0 Comments