
சென்னை: திமுக பிரமுகர் கொலை வழக்கில் கைதான 9 பேர் உட்பட சென்னையில் கடந்த 5 மாதங்களில் 148 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை அடுத்த மடிப்பாக்கத்தில் திமுகவின் 188-வது வட்ட செயலாளராக இருந்த மடிப்பாக்கம் செல்வம் கூலிப்படை மூலம் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜெயமுருகன் (42), குட்டி என்ற உமா மகேஸ்வரன் (43), ரவி என்ற ரமேஷ் (39), சகாய டென்சி (55), முத்துசரவணன் (31), மணிகண்டன் (32), தணிகாசலம் (33), கவுதமன் (45), சதீஷ்குமார் (34) ஆகிய 9 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xtvCfTz
0 Comments