
காட்பாடி: புதுச்சேரியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் வேலூரில் மர்மமான முறையில் உயிரிழந் துள்ளார். அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தவுடன் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் அடிப்படையில் விசாரணை நடத் தப்படும் என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தெரிவித்தார்.
புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சரவணன் (51). இவர், தமிழகம் முழுவதும் நிலங்களை வாங்கி அதனை வீட்டுமனையாக பிரித்து விற்பனை செய்து வருகிறார். இதற்காக, அவர் ‘சரவணா ரியல் எஸ்டேட் குரூப் ஆப் கம்பெனி’ ஒன்றையும் நடத்தி வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Ibz4SLx
0 Comments