Crime

சென்னை: விருத்தாசலம் கண்ணகி, முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மருதுபாண்டிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பெண்ணின் தந்தை, ஓய்வுபெற்ற காவல் அதிகாரி உள்ளிட்ட 9 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே குப்பநத்தம் புதுக்காலனி பகுதியை சேர்ந்தவர் சாமிக்கண்ணு மகன் முருகேசன். புதுக்கூரைப்பேட்டையை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் துரைசாமியின் மகள் கண்ணகி. வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் கல்லூரியில் படித்தபோதே காதலித்துள்ளனர். கடந்த 2003 மே 5-ம் தேதி பதிவுத் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர். முருகேசனின் உறவினர் வீட்டில் கண்ணகியும், மற்றொரு உறவினர் வீட்டில் முருகேசனும் தங்கியிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RwSXT5F

Post a Comment

0 Comments