
பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த நாகல்கேணியில் வீட்டில் ஹெராயின் போதை பொருள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக வட மாநிலத்தைச் சேர்ந்த அயூப் அலி, பாபு ஷேக், ஆலம் ஷேக், ராகுப், மேலும் சிறார் ஒருவர் என 5 பேரை சங்கர் நகர் போலீஸார் கைது செய்தனர்.
அவர்கள் தங்கியிருந்த அறையில் ரூ.2.40 லட்சம் மதிப்புள்ள 60 கிராம் ஹெராயினை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரில் சிறுவனை சீர்திருத்த பள்ளியிலும், மற்றவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலும் அடைத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CdLSwE2
0 Comments