
திருவண்ணாமலை: தி.மலை மாவட்டம் வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தில் வசித்தவர் விஜய்(21). மளிகை கடை நடத்தி வந்துள்ளார். கடைக்கு கடந்த 12-ம் தேதி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், சு.நாவல்பாக்கம் கூட்டுச்சாலை பகுதியில் விஜய் கொலை செய்யப்பட்டு உடல் எரிக்கப்பட்டது தெரியவந்தது. விஜயை செல்போனில் தொடர்பு கொண்ட ராமசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த மொய்தீன் (35), நல்லூரைச் சேர்ந்த நாராயணசாமி (32), வரதன் (41) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து தெள்ளார் காவல் துறையினர் விசாரித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8mw6piW
0 Comments