
கள்ளக்குறிச்சி: முத்துநகர் விரைவு ரயிலில், மது போதையில் ரயில் பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்ட 3 போலீஸார் உட்பட 5 பேரை விருத்தாசலம் ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.
சென்னை- தூத்துக்குடி இடையே இடையே இயக்கப்படும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) இரவு 7.15 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது. ரயில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மது போதையில் இருந்த 5 பேர் பயணிகளை கேலி கிண்டல் செய்தும், ரகளையிலும் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அங்கிருந்த பயணி ஒருவர் விழுப்புரம் ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். ரயில் விழுப்புரம் வந்து சேர்ந்த போதும் அங்கு எந்த போலீஸாரும் வரவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GQNA1xj
0 Comments