
குன்றத்தூரில், குடும்பத்துடன் வெளியூர் சென்று திரும்பிய தோல் தொழிற்சாலை உரிமையாளர் வீட்டில் 100 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருட்டில் ஈடுபட்டவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
குன்றத்தூரை அடுத்த மணிகண்டன் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஆசாத்(42). அனகாபுத்தூரில் தோல் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பெங்களூர் சென்றார். இந்நிலையில் நேற்று காலை அனைவரும் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், வீட்டில் இருந்து 100 பவுன் நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. வீட்டில் ஆள் இல்லாத நேரத்தை மர்ம நபர்கள் சிலர் சரியாக நோட்டமிட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4CMqlF1
0 Comments