
ராணிப்பேட்டை: சென்னை வளசரவாக்கம் பகுதி யில் சொத்து பிரச்சினைக்காக தந்தையை கொடூரமாக கொலை செய்த மகன், தந்தையின் உடலை பிளாஸ்டிக் டிரம்மில் அடைத்து காவேரிப்பாக்கம் அருகே காலி வீட்டுமனையில் புதைத்தார். இதையடுத்து, உடல் புதைக்கப்பட்ட இடத்தில் வருவாய்த்துறையினர் முன்னிலையில் நேற்று தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் வசித்து வந்தவர் குமரேசன் (78). ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். இவருக்கு குணசேகரன் என்ற மகனும், காஞ்சனமாலா, யமுனா, பரிமளா ஆகிய 3 மகள்களும் உள்ளனர். கணவர் இறந்ததால் காஞ்சனாமாலா தனியாக இருக்கும் தந்தையுடன் வசித்து வந்தார். அதே வீட்டின் தரைத்தளத்தில் மகன் குணசேகரன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/16YTVw8
0 Comments