
பள்ளிகொண்டா: கர்நாடக மாநிலத்தில் இருந்து சென்னைக்கு காரில் கடத்த முயன்ற 1 டன் எடையுள்ள குட்கா போதைப் பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே காவல் துறையினர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கர்நாடக மாநில பதிவெண் கொண்ட கார் ஒன்று அவ் வழியாக வேகமாக வந்தது. காவல் துறையினர் அந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அதில், தடை செய்யப்பட்ட பான்மசாலா, ஹான்ஸ், குட்கா ஆகிய போதைப் பொருட்கள் மூட்டைகளில் அடுக்கி வேலூர் வழியாக சென்னைக்கு கடத்தப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, காரில் இருந்த ரூ.5.50 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்களை காருடன் பறிமுதல் செய்த காவல் துறையினர் கடத்தலில் ஈடுபட்ட கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (25), சக்திவேல்(23) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AxYlIVo
0 Comments