Crime

தாம்பரம்: ‘மல்டி லெவல் மார்க்கெட்டிங்’ வாயிலாக, நாணயம் வழங்குவதாகக் கூறி, மோசடியில் ஈடுபட்ட இருவரை, தாம்பரம் போலீஸார் கைது செய்தனர்.

தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரி, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (42). இவர் மேற்கு தாம்பரம் சிடிஓ காலனி, 3-வது பிரதான சாலையில் ‘காயின் பிளஸ்’ என்ற பெயரில் நிறுவனத்தை நடத்தி வந்தார். இவரது நிறுவனத்தில் ஏஜென்ட்டாக பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தைச் சேர்ந்த அனுராதா(36) பணிபுரிந்து வந்தார். இவர் “வெங்கடேஷ் தன்னிடம் பணம் பெற்றுக் கொண்டு தங்க நாணயம் வழங்குவதாகக் கூறி ஏமாற்றிவிட்டார்” என தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JcxaXzu

Post a Comment

0 Comments