
தென்காசி: தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகே சாயமலை, மேல சிவகாமியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அழகுராஜா. இவரது தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். இனால், வாரிசு சான்றிதழ் கேட்டு திருவேங்கடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அழகுராஜா விண்ணப்பித்தார்.
இந்நிலையில், வாரிசு சான்றிதழ் வழங்க திருவேங்கடம் வட்டாட்சியர் மைதீன் பட்டாணி ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், பேரம் பேசி ரூ.2 ஆயிரம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அழகுராஜா, இதுகுறித்து தென்காசி லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார். இதைஅடுத்து, போலீஸார் தந்த ரசாயனம்தடவிய ரூபாய் நோட்டுகளை திருவேங்கடம் வட்டாட்சியரிடம் நேற்று முன்தினம் மாலையில் அழகுராஜா கொடுத்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Xxemy7B
0 Comments