Crime

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கூட்டுறவு காலனியைச் சேர்ந்தவர் அபிஷேக். இவரது மனைவி ராசி(27). இவர், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த 2020-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்து முடித்தார். இதைத் தொடர்ந்து, மருத்துவம் தொடர்பான எம்.டி மேற்படிப்பை படிக்க ராசி திட்டமிட்டார். அதற்கு ‘நீட்’ தேர்வை எழுத வேண்டியிருந்தது. இதனால் நீட் தேர்வுக்கு மருத்துவர் ராசி கடந்த சில மாதங்களாக படித்து வந்துள்ளார்.

நீட் தேர்வு மீது இருந்த அச்சத்தின் காரணமாக, கடந்த சில நாட்களாக, தான் நீட் தேர்வு எழுதப் போவதில்லை என கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் ராசி கூறி வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் குடும்பத்தினர் அச்சப்படாமல் நீட் தேர்வை எழுது என அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டிலிருந்த ராசி, தனது அறைக்கு படிக்கச் செல்வதாக கூறிவிட்டுச் சென்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/icdfhC0

Post a Comment

0 Comments