
தேனி: தேனி அருகே கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த காவல் ஆய்வாளர் மற்றும் 3 காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அல்லிநகரம் காவல் ஆய்வாளர் ராஜேஷ்கண்ணன், காவலர்கள் ராஜா, ஸ்ரீதர், வாலிராஜன் ஆகியோர் கஞ்சா வியாபாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாக எஸ்பிக்கு புகார் சென்றது. அவர்கள் மூவரும் கண்காணிக்கப்பட்டனர். இதில் கஞ்சா விற்பனைக்கு இவர்கள் துணையாக இருந்ததும், பறிமுதல் மற்றும் கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருந்ததும் தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/X1wmWGh
0 Comments