Crime

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ஷா ஹினாஜ் கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்தர் பன்வார். கடலை வியாபாரி. இவரது மகன் நீரஜ் பன்வார் (24). இவரும், அதே பகுதியை சேர்ந்த சஞ்சனா (22) என்பவரும் தீவிரமாக காதலித்தனர். ஆனால், ஜாதி வேறு என்பதால் நீரஜ் பன்வாரை திருமணம் செய்ய கூடாது என்று சஞ்சனா வீட்டில் கண்டிப்பாக கூறிவிட்டனர். இதனால், கடந்த ஆண்டு சஞ்சனா வீட்டை விட்டு வெளியேறி நீரஜ் பன்வாரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது 2 மாத ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, நீரஜ் பன்வாரும், அவரது தந்தை ராஜேந்தர் பன்வாரும் பைக்கில் பேகம் பஜார் மீன் மார்க்கெட் அருகே சென்ற போது, திடீரென 5 பேர் வழிமறித்து நீரஜ் பன்வாரை கத்தியால் குத்தி தந்தை கண் முன்னே கொலை செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aTK9RLu

Post a Comment

0 Comments