Crime

வேலூர்: ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, கடந்த 23-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் ‘‘தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி, ஆந்திர மாநிலத்துக்கு கடத் தப்பட்டு அங்குள்ள மில்களில் பாலிஷ் செய்யப்பட்டு மீண்டும் தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில சந்தைகளில் கிலோ 40 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள கிராமங்கள் வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்’’ என குறிப் பிட்டிருந்தார்.

ஏற்கெனவே காஞ்சிபும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு லாரி, லாரியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக புகார் எழுந்த நிலையில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வரின் குற்றச் சாட்டால் தமிழக உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HFuem75

Post a Comment

0 Comments