
சென்னை: சென்னை பொழிச்சலூரில் ஐடி ஊழியர் ஒருவர் மனைவி, மகன், மகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து தாம்பரம் மாநகர காவல் ஆணையர் ரவி விளக்கமளித்துள்ளார்.
நடந்தது என்ன? சென்னை பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (41). இவர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு காயத்திரி (39) என்ற மனைவியும், நித்யஸ்ரீ (13) என்ற மகளும், ஹரி கிருஷ்ணன் என்ற 8 வயது மகனும் இருந்தனர்.
இந்நிலையில் இன்று அவர் மனைவி, மற்றும் குழந்தைகளுடன் கழுத்தறுபட்ட நிலையில் வீட்டில் சடலமாகக் கிடந்தார். அருகில் உள்ள சுவற்றில் ஒரு தற்கொலைக் கடிதம் ஒட்டப்பட்டிருந்தது. அதில் மின் ரம்பத்தால் மனைவி, குழந்தைகளை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தானும் வழுது கையால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தற்கொலைக்கு வேறு யாரும் காரணமில்லை என்றும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக சங்கர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RoMcdQp
0 Comments