
சென்னை: பழைய துணிகளை சேகரிக்கும் தன்னார்வலர் போல நடித்து திறந்திருக்கும் வீடுகளுக்குள் புகுந்து கைவரிசை காட்டிய பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை, வில்லிவாக்கம், வடக்கு திருமலை நகரைச் சேர்ந்தவர் பிரியா பிரசாத். ஆசிரியரான இவர், கடந்த மாதம் 23-ம் தேதி தனது வீட்டை தாழ்ப்பாள் போட்டு விட்டு அருகில் வசிக்கும் உறவினர் வீட்டுக்குச் சென்றார். சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பீரோவில் வைத்திருந்த 57 பவுன் நகைகள், ரொக்கம் ரூ.25 ஆயிரம் திருடு போயிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/k6voQBS
0 Comments