
உதகை: உதகை அரசு கலைக் கல்லூரியில்‌ பணிபுரியும் உதவிப் பேராசிரியையிடம் பாலியல் ரீதியாக தகாத முறையில் பேசியதாக, தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்‌ மீது எஸ்சி, எஸ்டி, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்‌கீழ்‌ வழக்கு பதிவு செய்‌யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம்‌, உதகை அரசு கலைக் கல்‌லூரியில்‌ கடந்த 15 ஆண்டுகளுக்கும்‌ மேலாக உதவிப் பேராசிரியையாக ஒருவர்‌ பணிபுரிந்து வருகிறார்‌. இவர்‌, பட்டியல்‌ வகுப்பைச் சேர்ந்தவர்‌. கடந்த பிப்ரவரி மாதம்‌ கல்லூரி முதல்வர்‌, தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்‌ தர்மலிங்கம்‌, உதவிப் பேராசிரியை உள்ளிட்‌டோர்‌ கல்லூரி வளாகத்‌தில்‌ புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் உள்ள வகுப்‌புகள்‌ குறித்த விவரத்தை சேகரிக்க சென்றுள்ளனர்‌. அப்போது, பெண்‌ உதவிப் பேராசிரியையிடம்‌ பாலியல்‌ ரீதியாக தகாத வார்த்தைகளால் தர்மலிங்கம்‌ பேசியதாக கூறப்படுகிறது. இதனால்‌, அதிர்ச்சியடைந்த உதவிப் பேராசிரியை, மறுநாள்‌ கல்லூரி முதல்வரிடம்‌ புகார்‌ அளித்துள்ளார்‌.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bwh9a5K
0 Comments