Crime

சென்னை: சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி ரஞ்சித்குமார் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க போலீஸார் ஆலோசித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட இவரதுமனைவியை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தாலுகா, ஒதியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் என்ற ஓவிஆர் (35). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது கொலை, கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. புரட்சி பாரதம் கட்சியின் செங்கல்பட்டு பகுதி நிர்வாகியாக இருந்த இவர், அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BD9NoJn

Post a Comment

0 Comments