
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அத்திமாகுலப்பல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (30). இவர், அரசு வேலையில் சேர முயற்சி எடுத்து வந்தார். இந்நிலையில் ஆம்பூர் அடுத்த சாத்தம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பாவர்த்தம்பட்டறை பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (47), தரணிகுமார் (38) ஆகிய 2 பேரும், புருஷோத்தமனுக்கு அறிமுகமாகினர். இவர்கள் 2 பேரும் அரசு வேலை வாங்கித் தருவதாக புருஷோத்தமனிடம் தெரிவித்துள்ளனர்.
இதை நம்பிய புருஷோத்தமன் ரூ.19 லட்சம் பணத்தை பல தவணைகளாக ராஜ்குமார் மற்றும் தரணிகுமாரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. பணத்தை பெற்றுக்கொண்ட இருவரும் எந்த வேலையும் வாங்கி தரவில்லையாம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/08oX6JQ
0 Comments